சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. இதையொட்டி நடைபெற்ற பத்ரிகையாளர்கள் சந்திப்பில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:
எந்த மைதானத்தில் விளையாடுகிறோமோ, அதற்கு தகுந்தபடி பந்து வீச்சு திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்வோம். அடிப்படை விஷயங்களான லைன் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்துவோம். மேலும் பீல்டிங்கிற்கு தகுந்தவாறு பந்து வீச வேண்டும். இப்போதெல்லாம் எந்தவித ஸ்கோரும் பாதுகாப்பானது இல்லை. 212 ரன்கள் (லக்னோவுக்கு பெங்களூரு அணி சேர்த்த ரன்கள்) கூட போதுமானதாக இருக்கவில்லை. பந்துவீச்சில் கட்டுப்பாடுடனும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் மைதானம், அங்கு நிலவும் சூழ்நிலையும் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் அவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
0 கருத்துகள்