Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“மல்யுத்த வீராங்கனைகள் வீதிகளில் போராடுவதைக் கண்டு மனம் வலிக்கிறது” - நீரஜ் சோப்ரா

புதுடெல்லி: “மல்யுத்த வீராங்கனைகள் வீதிகளில் இறங்கிப் போராடுவது என்னைக் காயப்படுத்துகிறது” என ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்