Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எளிய தொழில்நுட்பம் மூலம் தட்பவெப்ப நிலை, வானிலை சாதனம்: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருபவர் பரத்குமார். இவர் அறிவியல் ஆசிரியை அனிதா வழிகாட்டுதலோடு எளிய தொழில் நுட்பத்தில் வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், மழை முன் அறிவிப்பு, காற்றழுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்கும் வானிலை சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த சாதனத்தை பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர் பரத்குமார் காட்சிக் குவைத்தார். அது சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மண்டல அறிவியல் கண்காட்சியில் நடுநிலை பிரிவில் இந்த சாதனத்துடன் அவர் பங்கேற்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்