Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டூ பிளெஸ்ஸி பொறுப்பான ஆட்டம்; லக்னோவுக்கு எதிராக 126 ரன்கள் எடுத்த ஆர்சிபி

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் டூ பிளெஸ்ஸி, ஆர்சிபி அணியை வழிநடத்துகிறார். கடந்த சில போட்டிகளாக அவர் கேப்டன்சி பணியை கவனிக்கவில்லை.

இன்னிங்ஸை தொடங்கிய விராட் கோலி மற்றும் டூ பிளெஸ்ஸி நிதானமாக ஆடினர். சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தியது லக்னோ. அதற்கு காரணம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததுதான். முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்