Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலக கிரிக்கெட்டையே கபளீகரம் செய்யப்போகிறதா ஐபிஎல்? - பெருகும் அச்சம்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் அணி உரிமையாளர்கள் வேறு பல நாடுகளிலும் தங்கள் உரிமைதாரர் வலையைத் தனியார் டி20 கிரிக்கெட்டின் மீது விரித்திருப்பதாலும் பல நாடுகளின் வீரர்களை ஐபிஎல் மட்டுமல்லாது மற்ற நாட்டு டி20 கிரிக்கெட்டில் தங்கள் அணிகளில் ஆட ஒப்பந்தம் பேசும் விதமாக முறைசாரா பேச்சு நடத்தி வருவதாக விளையாட்டு சார்ந்த செய்திகளை வெளியிட்டு வரும் இணையதளம் ஒன்று தகவல் ளியிட்டுள்ளது.

இதனையடுத்து, உலக கிரிக்கெட்டை ஐபிஎல் அணிகள் கபளீகரம் செய்கிறதா என்ற விவதங்கள் எழுந்துள்ளன. முன்னணி கிரிக்கெட் நாடுகளிலிருந்து வீரர்கள் ஐபிஎல் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னணி சர்வதேச வீரர்களின் பணி நியமனஸ்தர் அந்தந்த நாட்டு வாரியம் அல்ல, மாறாக ஐபிஎல் உரிமையாளர்களே இந்த வீரர்களின் உரிமையாளர்களாகி விடுவார்கள் என்று கூறுகிறது அந்த செய்தி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்