Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மழையால் ஐபிஎல் இறுதிப்போட்டி ரத்து: மாற்று நாளான இன்று நடைபெறுகிறது

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற இருந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிமழைகாரணமாக ரத்து செய்யப்பட்டது.அதேவேளையில் இந்த ஆட்டம் மாற்று நாளான இன்று (29-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இறுதிப் போட்டிஅகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணி அளவில் நடைபெறுவதாக இருந்தது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத ஆயத்தமாக இருந்தது. போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மைதான பகுதியைசுற்றிலும் மழை பொழிந்தது. இதனால் மைதானத்தின் ஆடுகளம் தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்