Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யாருடைய திருப்திக்காக கம்பீர் - கோலி மோதல்? - ஆர்சிபி வெற்றி பெற அவசரம் காட்டிய லக்னோ!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றதையடுத்து லக்னோ அணியின் சொந்த மண்ணான லக்னோ மைதானத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று பழி தீர்த்தது. இந்த ஆட்டத்தில் கோலியும் கம்பீரும் மோதிக் கொண்டனர். கோலியின் பாடி லாங்குவேஜ் ஆரம்பத்திலிருந்தே அதீதமாக இருந்ததை அனைவருமே தொலைக்காட்சியில் பார்த்திருப்பார்கள். ஆனால், 127 ரன்கள் இலக்கைக் கூட எடுக்க முடியாமல் ஒரு அணி தோற்கிறது என்றால், அந்தப் போட்டியின் நம்பகத்தன்மை மீது ஐயம் எழுவது இயல்பே.

முதலில் 62/0 என்ற நிலையிலிருந்து 10 விக்கெட்டுகளை அடுத்த 64 ரன்களில் இழந்தது ஆர்சிபி அணி. நவீன் உல் ஹக், ரவி பிஷ்னாய், அமித் மிஸ்ரா, கிருஷ்ணப்பா கவுதம் தங்களிடையே 8 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். சரி, 128 ரன்கள் இலக்கு துரத்தும் லக்னோ அணி எப்படி சேஸ் செய்ய வேண்டும்?


கருத்துரையிடுக

0 கருத்துகள்