Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டிராய் உத்தரவின்படி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தொல்லை அழைப்புகளுக்கு முடிவு: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை

புதுடெல்லி: தொல்லை தரும் செல்போன் அழைப்புகளை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் டிராயின் உத்தரவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நேற்றுமுதல் அமல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதனால், தேவையில்லாத தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான செல்போன் பயனாளர்களுக்கு வணிக ரீதியிலான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் பெரும் தொல்லையாக மாறியுள்ளன. இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்துமாறு டிராய் உத்தரவிட்டிருந்தது. இதனை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நேற்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரத் தொடங்கியுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்