சென்னையில் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றதன் மூலம் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. கூடவே டாப் இரண்டு இடங்களில் சிஎஸ்கே முடிவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் இருவரும் சிஎஸ்கேவை ஆட்டிப்படைத்துவிட்டார்கள், இதனால் சிஎஸ்கே 144/6 என்று முடிந்தது. ஆனால் தீபக் சஹாரின் மோசமான பந்துகளுக்கு அதைவிட மோசமாக ஆடி ஜேசன் ராய், குர்பாஸ், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் சடுதியில் ஆட்டமிழக்க கொல்கத்தா ஏன் நாங்களும் இந்த இலக்கை எடுக்க முடியாமல் தோற்கக் கூடாதா என்ன என்பது போல் அவர் ப்ளேவுக்குள் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
0 கருத்துகள்