Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோலி vs கம்பீர் | ஐபிஎல் முடிந்ததும் கட்டிப்பிடி வைத்தியம்: ஹர்பஜன் சிங் உறுதி

மும்பை: ‘நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்ததும் கோலி மற்றும் கம்பீர் என இருவரையும் சந்திக்க செய்வேன். அப்போது அவர்கள் இருவரையும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவ செய்வேன்’ என உறுதி கொடுத்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி இருந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் பெங்களூரு வீரர் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அது அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதீத கவனம் பெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்