Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அணிக்கு திரும்பிய பும்ரா: அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் கேப்டனாக அறிவிப்பு

காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்து வந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. தற்போது நடைபெற்று வரும் 3 ஒருநாள் தொடர் போட்டிகளில் 1-1 என்ற நிலையில் இரண்டு அணிகளும் சமனில் உள்ளன. கடைசிப்போட்டி நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ம் தேதி இரு அணிகளுக்கிடையிலான டி20 தொடர் நடைபெறுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்