Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆஷஸ | ஆஸ.ய வமரசதத ரஷ சனக: ஆதரதத அநதண அலபனஸ!

லண்டன்: நடப்பு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வீரர் அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையாகியுள்ள நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய அணியை விமர்சித்துள்ளார். மறுபக்கம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தங்கள் நாட்டு அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். விளையாட்டு விவகாரத்தில் இருநாட்டு பிரதமர்களும் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை பார்ப்போம்.

பந்து டெட் என எண்ணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது ஸ்ட்ரைக்கில் இருந்த பேர்ஸ்டோ கிரீஸை விட்டு நகர்ந்து சென்றார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்டம்புகளை தகர்த்தார். அதையடுத்து அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளானது. இந்நிலையில், இது தொடர்பாக ரிஷி சுனக் மற்றும் அந்தோணி அல்பனீஸ் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்