Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலகக் கோப்பைக்கு முன்னர் அணிக்கு திரும்புவார் என நம்புகிறோம்: பும்ரா குறித்து ரோகித்

பார்படாஸ்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பும்ரா அணிக்கு திரும்புவார் என நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்திருந்தார்.

ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று பார்படாஸில் தொடங்குகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்