சென்னை: 12 அணிகள் கலந்துகொள்ளும் புச்சிபாபு அகில இந்திய கிரிக்கெட் போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது. முதன்முறையாக இந்த தொடர் சென்னைக்கு வெளியே நடத்தப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் உலகக் கோப்பை தொடருக்காக தயார் செய்யப்பட்டு வருவதால் புச்சிபாபு கிரிக்கெட் தொடரை டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஞ்சி கோப்பை தொடரை போன்று புச்சிபாபு தொடரின் ஆட்டங்களும் 4 நாட்கள் நடைபெறும்.
0 கருத்துகள்