மும்பை: உலகக் கோப்பையை தட்டில் வைத்துப் பெற முடியாது, சாம்பியன் பட்டம் வெல்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும், இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் மன உறுதியுடனும், தன்நம்பிக்கையுடனும் உள்ளோம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களில் பட்டம் வென்று 10 வருடங்கள் ஆகிறது. கடைசியாக இந்திய அணி 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
0 கருத்துகள்