Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ODI WC | “2019 தொடரில் கோலி 4-வது இடத்தில் பேட் செய்ய விரும்பினேன்” - ரவி சாஸ்திரி

மும்பை: கடந்த 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 4-வது இடத்தில் பேட் செய்ய வேண்டுமென தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆர்டரில் களம் காணும் நான்காவது வீரர் யார் என்ற குழப்பம் நிலவி வருகிறது. அந்த இடத்தில் பல வீரர்கள் பேட் செய்ய வைத்து, அணி நிர்வாகம் சோதனை மேற்கொண்டுள்ளது. ஆனால், அதில் சிலர் மட்டுமே கச்சிதமாக பொருந்துகிறார்கள். அவர்களும் காயம், ஃபார்ம்-அவுட் போன்ற காரணங்களால் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை இழக்கின்றனர். இந்தச் சூழலில் ரவி சாஸ்திரி இதனை தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்