Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘மாயா’ இயங்குதளத்துக்கு மாறும் பாதுகாப்பு அமைச்சகம்: வின்டோஸுக்கு முடிவுரை

சென்னை: சைபர் பாதுகாப்பு மற்றும் மால்வேர் சார்ந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் விண்டோஸ் இயங்குதளத்துக்கு மாற்றாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மாயா இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் கணினிகளைப் பயன்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் ஆறு மாத காலத்தில் உள்நாட்டைச் சேர்ந்த அரசு முகமை இந்த இயங்குதளத்தை வடிவமைத்துள்ளது. இது Ubuntu எனப்படும் ஓபன் சோர்ஸ் மென்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல். இப்போதைக்கு இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கணினிகளில் மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று (ஆகஸ்ட் 15) முதல் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்