Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆசிய போட்டியில் இந்திய வீரர்களுக்கு தடை எதிரொலி: சீன பயணத்தை ரத்து செய்த அமைச்சர் அனுராக்

புதுடெல்லி: இந்தியாவின் மூன்று தடகள வீரர்களை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சீனா தடை விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு செல்ல இருந்த தனது பயணத்தை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ரத்து செய்துள்ளார்.

சீனாவின் ஹோங்சு நகரில் நாளை 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளச் சென்ற அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வுஷூ (WUSHU) வீரர்களான நைமன் வங்க்சு, ஒனிலு தேகா மற்றும் மேபுவுங் லாம்கு ஆகியோர் சீனாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்