Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆசிய டேபிள் டென்னிஸ் | இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலப் பதக்கம்

பியோங்சாங்: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. முதல் ஆட்டத்தில் சீன தைபேவின் ஹுவாங் யுவான் 11-6, 11-6, 11-9, என்ற நேர் செட்டில் இந்தியாவின் ஷரத் கமலை வீழ்த்தினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்