Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அஸ்வினின் ‘டூப்’பை அழைத்த ஆஸி.; வாய்ப்பை நிராகரித்த ஆஃப் ஸ்பின்னர்!

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் இடம்பெற்றார். இந்தச் சூழலில் அஸ்வினை சமாளிக்க அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பித்தியாவை நெட் பவுலராக அழைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். ஆனால், அவரோ அதனை மறுத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், அக்டோபர் 8-ம் தேதி அன்று சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் விளையாடுகின்றன. அஸ்வின், சென்னையை சேர்ந்தவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசும் திறன் படைத்தவர். அதனால் அவர் ஆடும் லெவனில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்