Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘என் இனிய பொன் நிலாவே’ - இளையராஜா பாடலை கிட்டாரில் வாசித்த கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்

சென்னை: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை கிட்டாரில் வாசித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் சென்னை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாறிப்போனார் வாட்சன். 2019-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல் பைனலில் காலில் பலத்த காயம் அடைந்து, ரத்தம் வடிந்தாலும் அணிக்காக போராடிய செயலுக்காக வாட்சன் இன்றளவும் தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்