Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“முட்டாள்தனமான யோசனை” - 'லைட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் அதிருப்தி

புதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துவரும் மைதானங்களில் நிகழ்த்தப்படும் 'லைட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் அதிருப்தி தெரிவித்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல். டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இந்தப் போட்டியில் நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை சிதறடித்த மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக எடுக்கப்பட்ட சதம் இதுவாகும்.

இந்தப் போட்டியின் போது டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் 'லைட் ஷோ' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வீரர்கள் செஞ்சுரி அடிக்கும்போதும், அணி வெற்றிபெறும் போது என முக்கிய கட்டங்களில் மைதானத்தில் வண்ண விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டன. இரண்டு நிமிட அந்த 'லைட் ஷோ'வினால் மைதானமே முற்றிலுமாக வண்ணங்கள் நிறைந்ததாக காட்சியளித்தது. போட்டிகளை நேரில் பார்க்க வரும் ரசிகர்களை கவர்வதற்காக நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த 'லைட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்