Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“பந்து வீச்சாளர்கள் காட்டிய மன உறுதிதான் வெற்றிக்கு காரணம்” - ரோஹித் சர்மா

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
1.30 லட்சம் ரசிகர்கள் திரண்டிருந்த அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியஅணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு பதிலாக ஷுப்மன் கில் களமிறங்கினார். பாகிஸ்தான் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக், இமாம் உல் ஹக் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

8 ஓவர்களில் 41 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் அப்துல்லா ஷஃபிக்கை (20), எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்து திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார் மொகமது சிராஜ். நிதானமாக விளையாடிய இமாம் உல் ஹக்கை 36 ரன்களில் வெளியேற்றினார் ஹர்திக் பாண்டியா. இதன்பின்னர் கேப்டன் பாபர் அஸமுடன் இணைந்த மொகமது ரிஸ்வான் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இந்த ஜோடி ரன் ரேட் விகிதத்தை 5 என்ற அளவில் கொண்டு சென்றது. 29 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 150 ரன்கள் சேர்த்து வலுவாகவே இருந்தது. பாபர் அஸம் 57 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 29-வது அரை சதத்தை அடித்தார். 30-வது ஓவரை வீசிய மொகமது சிராஜ், பாபர் அஸமை (50) போல்டாக்கினார். இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 3வது விக்கெட்டுக்கு மொகமது ரிஸ்வானுடன் இணைந்து பாபர் அஸம் 82 ரன்கள் சேர்த்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்