Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ODI WC 2023 | சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி - தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

அகமதாபாத்: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து - இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று தொடங்கியுள்ளன. இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 45 லீக் ஆட்டங்கள் உட்பட 48 ஆட்டங்கள் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. தொடக்க நாளான இன்று இங்கிலாந்து–நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகின்றன. பிற்பகல் 2 மணிக்கு ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, ஐசிசி ஒரு சிறிய விழாவை நடத்தியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்