Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ODI WC 2023 | தொடரின் முதல் போட்டியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மந்தம்!

அகமதாபாத்: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியை நேரில் பார்க்க மைதானத்துக்கு வந்திருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. பெரும்பாலான பார்வையாளர் மாடங்கள் காலியாக இருந்தன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இந்தியாவில் இன்று (5-ம் தேதி) தொடங்குகிறது. வரும் நவம்பர் 19-ம் தேதி வரை மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, இரு முறை பட்டம் வென்றுள்ள இந்தியா, தலா ஒரு முறை வாகைசூடி உள்ள பாகிஸ்தான், இலங்கை, கடந்த இரு முறையும் 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்