Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டிசம்பர் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி வரும் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட்-ராபின் சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டியில் விளையாடுவார்கள். இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள வீரர்களின் சராசரி எலோ ரேட்டிங் 2,711 ஆக உள்ளது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி (2727), டி.குகேஷ் (2720), பி. ஹரிகிருஷ்ணா (2696) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்