Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கடைசி டி20-ல் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி?

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசிமற்றும் 3-வது டி 20 ஆட்டம் இன்றுஇரவு 8.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே டி 20 தொடரை சமன் செய்யமுடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது இந்திய அணி. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் டர்பனில் நடைபெறஇருந்த முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் கெபர்ஹாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வதுஆட்டம் இன்று இரவு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட 2-வதுஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்களும் விளாசினர். திருத்தி அமைக்கப்பட்ட 152 ரன்கள் (15 ஓவர்கள்) இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 13.5ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு154 ரன் எடுத்து வெற்றி கண்டது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 27 பந்துகளில் 49 ரன்களும், கேப்டன் எய்டன்மார்க்ரம் 17 பந்துகளில் 30 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். தொடரில் 0-1 என பின்தங்கி உள்ளஇந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்