Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு கடினமானதாக இருக்கும்” - தென் ஆப்பிரிக்க வீரர் கோட்ஸி

செஞ்சுரியன்: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு கடினமாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஜெரால்டு கோட்ஸி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில், ஒருநாள் தொடரை இந்தியஅணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர் நடைபெற உள்ளது. செஞ்சுரியன் நகரில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர்26) தொடங்கவுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் நடத்தப்படும் டெஸ்ட் போட்டி இது என்பதால் இதை `பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி என்று அழைக்கின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்