Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

புதிதாக தேர்வான மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட்: மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பாஜக எம்.பி.யான பிரிஜ் பூஷண்சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் வைத்தனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்