Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“இங்கிலாந்து ‘பாஸ்பால்’ அதிரடி காட்டினால் விக்கெட்டுகளைக் குவிப்பேன்” - பும்ரா

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் ஆடவுள்ளது. இப்போதைய பேச்சு என்னவெனில் இங்கிலாந்தின் பேட்டிங் அணுகுமுறை பற்றியதே. அதாவது சமீப காலமாக இங்கிலாந்து பேட்டர்கள் வருவது வரட்டும் பிட்சாவது மண்ணாவது மட்டையை எடுத்தால் விளாசல்தான் என்று டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் நிறைய வெற்றிகளையும் குவித்து வருகிறார்கள், ஆனால், இந்த அணுகுமுறை இந்தியாவில் பலிக்குமா என்பதுதான் கேள்வி.

இந்நிலையில்தான் பும்ரா கூறுகிறார், ‘பாஸ்பால் அதிரடி காட்டினால் நான் விக்கெட்டுகளைக் குவிப்பேன்’ என்று. இவர் கூறுவது உண்மையா? ஏனெனில், பர்மிங்ஹாமில் இவரது கேப்டன்சியில் 5-வது டெஸ்ட் போட்டியில் ஆடியபோது இவரால் மட்டுமல்ல சிராஜ், ஷமி போன்றோராலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்போது வந்து மார்த்தட்டுவது இங்கிலாந்தை அதன் நோக்கத்திலிருந்து பின்னடையச் செய்வதாக மட்டுமேதான் பார்க்க முடியும். பும்ரா இதைச் செய்து விடுவார் என்பதாகப் பார்க்கப்பட முடியாது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்