Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது இந்திய அணி: பென் டக்கெட் அதிரடி சதத்தால் இங்கிலாந்து ரன் வேட்டை

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அதிரடி சதத்தால் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது.

ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன்ஷா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 86 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, ஷுப்மன்கில் 0, ரஜத் பட்டிதார் 5 ரன்களில் நடையை கட்டிய நிலையில் ரோஹித் சர்மா 131, சர்பராஸ் கான் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 110,குல்தீப் யாதவ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்