Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs ENG | ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகல் - பிசிசிஐ

மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் விலகியுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். அவரது சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். போட்டிக்கு பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் அஸ்வின் பங்கேற்று பேசி இருந்தார். அப்போது தான் சுழற்பந்து வீச்சாளர் ஆனது தற்செயலாக நடந்த விஷயம் என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகி உள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்