Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4-1 என வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தரம்சாலாவில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 2-வது நாள்ஆட்டத்தின் முடிவில் 120 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 473 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் 110,ரோஹித் சர்மா 103, தேவ்தத் படிக்கல் 65, சர்பராஸ் கான் 56 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் 27, ஜஸ்பிரீத் பும்ரா 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்