Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தரம்சாலா டெஸ்ட் | காயத்தால் களம் காணாத ரோகித் சர்மா - அணியை வழிநடத்தும் பும்ரா

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. முதுகுவலி காரணமாக ரோகித் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா உடல்தகுதி பிரச்சனையால் ஒரு நாள் ஆட்டத்தை இழந்து இருப்பது இதுவே முதல் முறை. இந்திய அணியில் கடந்த சில வாரங்களாக காயம் போன்ற சிக்கல்கள் இருந்தபோதிலும் ரோகித் தொடர்ந்து காயம் அடையாமல் ஆடும் லெவனில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, ரோகித் 103 ரன்களை அடித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்