Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி: 48-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி மும்பை அணி அசத்தல்

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணியை இன்னிங்ஸை மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் தமிழகம் - மும்பை அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 2-வதுநாள் ஆட்டத்தில் 100 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்தது. தனுஷ் கோட்டியன் 74, துஷார் தேஷ்பாண்டே 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்