Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி

புதுடெல்லி: உலக தரவரிசை அடிப்படையில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர்டேபிள் டென்னிஸ் அணிகள்தகுதி பெற்று வரலாற்று சாதனைபடைத்துள்ளன.

தென் கொரியாவின் புசான் நகரில் கடந்த மாதம் டேபிள் டென்னிஸ் உலக அணிகள் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இது வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்று போட்டியாக அமைந்திருந்தது. இந்த தொடர் முடிவடைந்த நிலையில் அணிகள் பிரிவில் 7 இடங்கள் எஞ்சியிருந்தன. இவை தற்போது தரவரிசையின் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்