Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்: சொல்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்

லக்னோ: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. 177 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 6 பந்துகளை மீதம் வைத்து 19 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கேப்டன் கே.எல்.ராகுல் 53 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் குயிண்டன் டி காக் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15 ஓவர்களில் 134 ரன்கள் குவித்து மிரட்டியது. சென்னை அணியின் பந்து வீச்சு எந்த ஒரு கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்