Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை உள்ளிட்ட 10 மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கும் பிசிசிஐ

புதுடெல்லி: ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் போட்டிகள் நேற்று முன்தினம் சென்னையில் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் இந்த தொடருக்காக சிறந்த ஆடுகளங்களை அமைத்த வடிவமைப்பாளர்கள் மற்றும் மைதான பணியாளர்களை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளார் ஜெய் ஷா தனது எக்ஸ் வலைதள பதிவில், “ஐபிஎல் டி 20 தொடரை வெற்றிகரமாக நடத்த உதவியது கொண்டாடப்படாத ஹீரோக்களான நம்பமுடியாத வகையில் பணிபுரிந்த மைதான ஊழியர்கள்தான். இவர்கள், கடினமான வானிலையிலும் அற்புதமான ஆடுகளங்களை வழங்க அயராது உழைத்தவர்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்