Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சோபிக்காத பஞ்சாப் வீரர்கள் - பெங்களூரு அணி அபார வெற்றி @ ஐபிஎல்

தரம்சாலா: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் வழக்கம்போல் களமிறங்கினர். டாப் ஆர்டர் ஆட்டம் கண்டது. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 9 ரன்களிலும், அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 12 ரன்களிலும் வெளியேறினர்.

இதனையடுத்து விராட் கோலி - ரஜத் படிதார் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக படிதார் 21 பந்தில் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த கையோடு 55 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரை சதம் கடந்துக்கு அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 பந்தில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்