Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அழுத்தமான சூழலில் ரோஹித் சர்மா நல்ல முடிவுகளை எடுக்கக்கூடியவர்: சொல்கிறார் யுவராஜ் சிங்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இறுதி சுற்று வரை முன்னேற்றம் கண்டிருந்தது. மேலும் டி 20 உலகக் கோப்பையில் கடந்த 2022-ம் ஆண்டு அரை இறுதி வரை சென்றிருந்தது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் ஒருமுறை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்