Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இம்சிக்கும் ‘ஸ்பேம்’ அழைப்புகளால் பயனர்கள் அவதி: இது தேர்தல் கால நெருக்கடி!

சென்னை: இந்தியாவில் இது மக்களவைத் தேர்தலுக்கான காலம். அதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் ‘புதுப் புது’ எண்களில் இருந்து தங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு சொல்வதாக மொபைல் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஹைதராபாத் எனது பூர்விகம். பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். முதலில் எனக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. அடுத்த முறை கர்நாடகா. சமயங்களில் ரெக்கார்ட் செய்யப்பட்ட அழைப்புகள் கூட வருகின்றன. அதில் நான் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என சொல்கிறார்கள்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் 25 வயதான நிதிஷ்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்