Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

SRH vs LSG | கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்திய சஞ்சீவ் கோயங்கா

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 57-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை 58 பந்துகளில் எட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்நிலையில், இந்த ஆட்டம் முடிந்ததும் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா.

இந்த தோல்வி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், புள்ளிகள் பட்டியலில் டாப் 4 இடங்களில் இருக்கும் அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். கடந்த 2022 சீசன் முதல் லக்னோ அணி, ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு சீசனிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்