Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்; தோனியுடன் ஒப்பீடு: யார் இந்த ஸ்வப்னில் குசாலே? | பாரிஸ் ஒலிம்பிக்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள 3-வது பதக்கம் இதுவாகும்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் நேற்று இறுதி சுற்று நடைபெற்றது. 8 பேர் கலந்து கொண்ட இறுதி சுற்றில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஸ்வப்னில் குசாலே.


கருத்துரையிடுக

0 கருத்துகள்