பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஒரு தவறிழைத்துள்ளார். அதாவது டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்ததுதான் அந்தத் தவறு.
தொடர்ந்து டாசில் முடிவெடுக்க ரோஹித் சர்மா திணறுகிறார் என்றால் அவருக்கு பிட்ச் எப்படி என்பதைப் பற்றிய அனுபவத்தின் மீதான ஐயங்களை எழுப்புகிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிலும் டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியாவை அழைத்து செம அடி வாங்கினார்.
0 கருத்துகள்