Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்திய விளையாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும்: பிரதமர் மோடி பேச்சு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டில் 32 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 391 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கண்கவர் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

பாட்மிண்டன் வீரர் லக்சயா சென் தேசிய விளையாட்டு போட்டிக்கான ஜோதியை மைதானத்தை வலம் வந்தபடி பிரதமர் மோடியிடம் வழங்கினார். விழாவில் உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ரக் ஷா காட்சே, உத்தராகாண்ட் விளையாட்டுத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்