Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

5 அணிகள் கலந்து கொள்ளும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

வடோதரா: மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் வடோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களில் நடைபெறுகிறது. லீக் சுற்றில் 20 ஆட்டங்கள் உட்பட இந்தத் தொடரில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நுழையும். பிளே ஆஃப் ஆட்டம் மார்ச் 13-ம் தேதி நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி மார்ச் 15-ம் தேதி மும்பை பிராபர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்