லாகூர்: பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்களில் வென்றது நியூஸிலாந்து.
லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி சனிக்கிழமை (பிப்.8) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 74 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்தார். முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் சதம் விளாசினார் பிலிப்ஸ். ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவர் பதிவு செய்துள்ள முதல் சதம். அவர் ஆறாவது பேட்ஸ்மேனாக களம் கண்டு விளையாடி இருந்தார்.
0 கருத்துகள்