சென்னை: இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் புதிய நம்பிக்கையாக அவர் அறியப்படுகிறார்.
இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் பணிக்கு பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. கடந்த 1993 முதல் இதுநாள் வரையில் இந்தியாவை சேர்ந்த சுக்விந்தர் சிங் மற்றும் சவியோ மெடிரா ஆகியோர் மட்டுமே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, குரோஷியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை பயிற்சியாளராக நியமித்து இருந்தது இந்திய கால்பந்து நிர்வாகம். தற்போது அதை மாற்றிக் கொண்டு காலித் ஜமீல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்