சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அதிரடி விக்கெட் கீப்பர், பேட்டர் குவிண்டன் டி காக், தான் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆட விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஓய்வு பெற்றதை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கத் தலைமை பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராடிற்கு ஆகஸ்ட் மாதம் அதிகாலை 2 மணிக்கு டி காக்கிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் டி காக் தான் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆட விரும்புவதாகவும் தெரிவித்ததாக ஷுக்ரி கான்ராட் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்