ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 அணித் தேர்வில் ஹர்ஷித் ராணா தேர்வு குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கம்பீருக்கு ஆமாஞ்சாமி போடுபவர்களாக இருந்தால் அணியில் தேர்வு என்று ஸ்ரீகாந்த் கடும் காட்டமாக விமர்சன மட்டையைச் சுழற்றியுள்ளார்.
அதே போல் ஒருநாள் அணியில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாததையும் கடுமையாக விமர்சித்தார் ஸ்ரீகாந்த். வீரர்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கி வருகிறார்கள், மாற்றி மாற்றி எடுப்பதும் கவிழ்ப்பதுமாக அணியைத் தேர்வு செய்து வருகின்றனர். நன்றாக ஆடுபவர்களுக்கு வாய்ப்பில்லை, ஆடாதவர்களுக்கு வாய்ப்பு இப்படியெல்லாம் செய்யலாமா என்று ஸ்ரீகாந்த் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 கருத்துகள்